உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பிக்குவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பௌத்த பிக்கு ஒருவர் பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஈடுபடுத்தியிருப்பதாக புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுதந்திர ஊடகவியலாளர் சத்திக சக்குமாரவின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கொழும்பிலிருந்து செயற்படுகின்ற ஊடகவியலாளர்கள், புறமாகாணங்களில் செயற்படுகின்ற சுதந்திர ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
குருநாகலை மாவட்டம் பொல்கஹவலை பிரதேசத்தைச் சேர்ந்த ஊடக விருதுபெற்ற இந்த ஊடகவியலாளர், றெஸ என்கிற சிங்கள வார இறுதிப் பத்திரிகைக்கு இந்த செய்தியை வெளியிட்டிருந்தார்.
கடந்த பெப்ரவரி மாதமளவில் இந்த செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பௌத்த அமைப்புக்கள் சில அந்த ஊடகவியலாளருக்கெதிராக முறைப்பாடுகளை செய்தன.
இந்த முறைப்பாடுகளின் பிரகாரம் கைது செய்யப்பட்டு தற்போதும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச அரசியல் மற்றும் சிவில் சட்டங்களுக்கு கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க