வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் இந்தியர்கள் நால்வர் மர்மமான முறையில் உயிரிழப்பு

அமெரிக்காவில் அயோவா மாகாணம் வெஸ்ட் தேஸ் மொயின்ஸ் பகுதியில் இந்தியாவை சேர்ந்த நால்வர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுளளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கொலை தொடர்பில் அமெரிக்க பொலிஸார் தெரிவித்திருப்பதாவது,

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் அவர்கள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களது உடலில் துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்த காயங்கள் இருந்தன.  அவர்களது சடலங்கள் மரண பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .

பரிசோதனைகளின் பின்னரே மரணத்துக்கான காரணம் தொடர்பிலான உண்மைகளை கண்டறிய முடியும் எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பட்டதாரியான சந்திரசேகர் சுங்காரா (வயது 44) அவரது மனைவி லாவண்யா (41) மற்றும் 15 , 10 வயதான இரு பிள்ளைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க