வடக்கு செய்திகள்

முல்லைத்தீவு முள்ளியவளையில் விபத்து- ஒருவர் காயம்

முல்லைத்தீவு முள்ளியவளை வீதியில் தண்ணீரூற்று பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று இரவு முல்லைத்தீவு பகுதியில் இருந்து வட்டராம் முள்ளியவளையினை நோக்கி உந்துருளியில் பயணித்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் படையினர் மற்றும் பொலிஸாரின் வீதிசோதனைக்காக வைக்கப்பட்ட பரல்களில் உந்துருளி மோதியே விபத்து சம்பவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க