உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

கோப்பாயில் கத்திக்குத்து தாக்குதல் -பெண்ணொருவர் உயிரிழப்பு

காணிப் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டினால் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர், இருவர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பெண்ணொருவர் உரியிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சகோதரர் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

“காணிப் பிணக்கு காரணமாக உறவினர்களான அயலர்கள் இருவருக்கு இடையே நீண்டகாலமாக பிணக்குக் காணப்பட்டது. இந்நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் பாதிக்கப்பட்ட இருவரிடத்தும் பெரியத்தந்தை என குறிப்பிடப்படுகிறது.

கருத்து தெரிவிக்க