வடக்கு செய்திகள்

வவுனியாவில் 4 மாதங்களில் 18 சிறுவர் முறைப்பாடுகள் பதிவு

வவுனியா மாவட்டத்தில் இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 18 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் செ. நந்தசீலன் தெரிவித்தார்.

சிறுவர் முறைப்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

1929 என்ற சிறுவர் உதவி தொலைபேசி இலக்கதிற்கு இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 18 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

இம்முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாராசபைக்கு நேரடியாக கிடைக்கப்பெற்றவையாகவுள்ளதுடன் அவற்றில் அதிகளவானவை வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் இருந்தே கிடைத்துள்ளன.

சம்பவம் இடம்பெறும் வீடுகளுக்கு அருகில் உள்ளவர்கள், பாடசாலை சமூகம் மற்றும் மருத்துவதுறை சேர்ந்தவர்களால் கூடுதலாக இம்முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகிறது.

பாடசாலை இடைவிலகல் தொடர்பான முறைப்பாட்டு பதிவுகளே அவற்றில் அதிகமானவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க