உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஆறாம் சுற்றுப் பேச்சு திடீரென இரத்து!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் இன்று திங்கட்கிழமை 17ஆம் திகதி நடைபெறவிருந்த ஆறாம் சுற்று பேச்சுவார்த்தை அடுத்த புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்குமிடையிலான ஐந்தாம் சுற்று கலந்துரையாடல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடந்த 7 ஆம் நடைபெற்றது.

இந்நிலையிலேயே அடுத்த சுற்று பேச்சு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே திடீரென பிற்போடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க