உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கல்முனையில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்!

கல்முனையில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை 17ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம், கல்முனை விகாராதிபதி தலைமையில் இந்துக் குருக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளால் நடத்தப்பட்டுவருகின்றது.

கருத்து தெரிவிக்க