உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று – வீடுகள் சேதம்

வவுனதீவு – கொத்தியாவளை மற்றும் இலுப்பட்டிச்சேனை பகுதிகளில் வீசிய பலத்த காற்று காரணமாக சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் கூடிய பலத்த காற்று வீசியுள்ள நிலையில், வீடுகளின் கூரைகள் அள்ளுண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 30இக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க