உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அரியாலையில் மாதா சிலை விஷமிகளால் உடைப்பு!

யாழ்ப்பாணம் அரியாலை மணியம்தோட்டம் பகுதியில் வேளாங்கன்னி மாதா சிலை உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைப் பகுதியில் உள்ள வேளாங்கன்னி மாதா சிலை இன்று திங்கட்கிழமை 17ஆம் திகதி அதிகாலை இனம்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், மீன்பிடிக்கச் சென்ற சிலர் சிலை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க