உள்நாட்டு செய்திகள்புதியவை

கை,மொட்டு கூட்டணி சாத்தியமாகுமா? 6 ஆம் சுற்று பேச்சு இன்று!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான ஆறாம் சுற்று பேச்சுவார்த்தை இன்று முற்பகல் (17) நடைபெறவுள்ளது.
புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இருகட்சிகளுக்குமிடையிலான ஐந்தாம் சுற்று கலந்துரையாடல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடந்த 7 ஆம் நடைபெற்றது.
ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும், கட்சியின் தலைமைத்துவம், சின்னம் உட்பட பிரதான விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையிலேயே அடுத்த சுற்று பேச்சு இன்று நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க