உள்நாட்டு செய்திகள்புதியவை

பதவி விலக நேரிடும் – அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

வெளிநாட்டில் இருந்து சிகரட்டுக்களை இறக்குமதி செய்ய முயற்சித்தால் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில், அமைச்சர் மங்கள சமரவீர வெளிநாட்டு சிகரட்டுக்களை இறக்குமதி செய்ய நிதி அமைச்சு அனுமதியளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வெளிநாட்டில் இருந்து சிகரட்டுக்களை இறக்குமதி செய்யும் அரசாங்கம் ஒன்றில் தாம் அமைச்சு பதவி வகிப்பது கூட ஏற்புடையதல்லவெனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தான் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வரை அவ்வாறான எந்தவித யோசனைக்கும் இடம் வழங்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க