உள்நாட்டு செய்திகள்புதியவை

களியாட்ட நிகழ்வு ஒன்றில் போதைப் பொருட்களுடன் 51 பேர் கைது!

பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு ஒன்றில் போதைப் பொருட்களுடன் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றின் போதே இந்த கைது நடவடிக்கை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பலாங்கொட, பெலிஹுலோய பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரிகைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க