வெளிநாட்டு செய்திகள்

சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல் -11 பேர் உயிரிழப்பு

சோமாலியாவில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட கார்குண்டு தாக்குதலில் 11 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் மொகடிசுவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ள பொலிஸ் சோதனை சாவடியின் முன்பு குறித்த வெடிகுண்டு நிரப்பட்ட கார் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகின.

இந்த குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரத்துக்குள் மொகடிசுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் பரபரப்பான வீதியில் மற்றொரு கார் வெடித்துள்ளது .

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

சோமாலியாவில் அல்-கொய்தாவின் ஆதரவுபெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இவர்கள்  பொலிஸார், பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க