வெளிநாட்டு செய்திகள்

போப் ஆண்டவர் கேமரினோவிற்கு விஜயம்

இத்தாலியில் பூகம்பத்தினால் சேதமடைந்த கேமரினோ நகருக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இத்தாலியின் மத்திய பகுதியில் உள்ள கேமரினோ நகரம், கடந்த 2016ம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதத்தை சந்தித்தது.

இந்நிலையில்,பாதிக்கப்பட்ட மக்களை போப் ஆண்டவர் சந்தித்துள்ளார்.அத்துடன் நிலநடுக்கத்தில் பலத்த சேதமடைந்த கேமரினோ தேவாலயத்துக்கு சென்ற அவர் சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டார்.

இதன் போது மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர் , அமைதியை ஏற்படுத்த சகல முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க