வெளிநாட்டு செய்திகள்

இந்திய சிறுவன் டுபாயில் உயிரிழப்பு

டுபாயில் கல்விகற்று வந்த இந்திய சிறுவன் பாடசாலை வாகனத்தில் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த மொஹமட் பர்கான் பைசல் என்ற மாணவன் அங்குள்ள இஸ்லாமிய மையத்தில் கல்வி பயின்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

காலையில் பாடசாலை பேருந்தில் ஏறிய குறித்த மாணவன், காலை 8 மணியளவில் ஏனைய மாணவர்களுடன் பாடசாலைக்கு செல்லாத நிலையில் பேருந்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாடசாலை முடிந்து வந்து பார்த்த பொழுதே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பேருந்து சாரதி மற்றும் நடத்துனரின் கவன குறைவால் பல மணி நேரம் பேருந்தில் இருந்த மாணவன் மயக்கமுற்று உயிரிழந்துள்ளதாக டுபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொஹம்மட் பர்கான் மூன்று பிள்ளைகளில் கடைசி பிள்ளை என அவரது குடுமபத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க