சினிமா

சினிமாவில் என்னை வளர்த்து விட்டவர் இயக்குனர் சசி! – விஜய் ஆண்டனி-

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி; தான் இந்திய சினிமாவில் வளருவதற்கு காரணமாக இருந்தவர்களை பற்றி மேடைகளில் கூறி பெருமைப்படுத்துவதை வழக்கமாக கொண்டவர்.  இவர் தற்போது இயக்குனர் சசியைப்பற்றி பல்வேறு மேடைகளில் பேசி வருகிறார்.

அந்த வகையில், தான் சின்னத்திரையிலிருந்து இசையமைப்பாளராக எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கிய சுக்ரன் படத்தில் அறிமுகமானதாகவும், அதன்பிறகு இயக்குனர் சசியிடம் வாய்ப்பு கேட்டு சென்றதாகவும், அவரே “டிஸ்யூம்” படத்தில் இசையமைக்க வைத்ததாகவும் அதன் பின்னரே விஜய் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புக்களை பெற்றிருந்ததாகவும் குறிப்புட்டுள்ளார்.

அதே போல் நடிகரான பின்னரும் “நான், சலீம் மற்றும் இந்தியா பாகிஸ்தான்” போன்ற படங்களில் நடித்திருந்த போதும், சசியின் இயக்கத்தில் நடித்திருந்த “பிச்சைக்காரன்” படம்தான் தனக்கு வெற்றிப் படமாக அமைந்தது மட்டுமின்றி வசூல் அடிப்படையிலும் சாதனை புரிந்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்படத்தின் வெளிச்சத்தில் தான் இப்போது வரை பயணித்துக் கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து சசி இயக்கும் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க