உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணி மீது சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கட் அணி சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்துக்கு விளக்கமளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இறுதியாக இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி கண்டது.

இதனையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பதற்கு இலங்கை அணி மறுத்துவிட்டது.

இந்த செயல் தொடர்பாக சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் இலங்கை அணியின் முகாமையிடம் விளக்கம் கோரவுள்ளது.

ஏற்கனவே ஏனைய அணிகளுக்கு கிடைக்கும் வசதிகள் தமக்கு கிடைக்கவில்லை.

தமது அணி பாரபட்சமாக நடத்தப்படுகிறது என்று இலங்கை அணியின் முகாமை முறையிட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க