உள்நாட்டு செய்திகள்புதியவை

இரவு நேர களியாட்ட விடுதிகள் தேவை: அமைச்சர் ஜோன் அமரதுங்க

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க இரவு நேர களியாட்ட விடுதிகள் தேவை என சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சிட்டி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் ஜோன் அமரதுங்கவை சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்திய இளம் சுற்றுலாப் பயணிகளின் வருகை முக்கியம் எனவும் அவர்கள் தொடர்ந்தும் வருவார்களாயின் யாரையும் நம்பி இருக்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இயற்கை அழகு, பசுமையான தேயிலை தோட்டங்கள், கடற்கரைகள் மற்றும் வரலாற்று தளங்கள் என்பன வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியது எனவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க