உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

30 வருடங்களின் பின்னா் யாழ்.அச்சுவேலி- மூளாய் சிற்றுாா்தி சேவை

புதிய அரசாங்கத்தினை ஆட்சிக்கு கொண்டு வந்ததாகக் கூறுபவர்கள் தற்போது தேர்தல் வரும் போது அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என கூற முற்பட்டிருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.அச்சுவேலி- மூளாய் இடையிலான சிற்றுாா்தி சேவை 30 வருடங்களின் பின்னா் இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த சிற்றூர்தி சேவையினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் தலைவர்களைத் தெரிவு செய்து மக்கள் எவ்வாறான ஏமாற்றங்களை பெற்றுக்கொண்டனர் என்பதை உணர்ந்து எதிர்வரும் தேர்தலில் சரியான தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.

கருத்து தெரிவிக்க