உள்நாட்டு செய்திகள்புதியவை

மூன்று நாட்களின் பின் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட மாணவி!

பதுளை பகுதியில் காணாமல் போயிருந்த பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை லொங்கல்ல நீர்தோக்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி காணாமல் போயிருந்த பதுளை, மெத பத்தன பகுதியை சேர்ந்த 19 வயதுடைய லக்ஷிகா மதுவந்தி என்ற மாணவியின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி காணாமல் போயிருந்ததாக பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கந்தகெட்டிய பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த மாணவியின் பொருட்கள் சில லொங்கல்ல நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள புதருக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, லொங்கல்ல நீர்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த மாணவியின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் கொலையா அல்லது தற்கொலையா என்ற அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க