விளையாட்டு செய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் நடைபெறும் உலக கிண்ண கிரிக்கட் போட்டியில், இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பொதுவாகவே, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கட் போட்டிகளில் உச்சகட்ட பரபரப்பு நிலவும். அந்தவகையில் இன்றைய போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

உலக கிண்ண போட்டிகளை பொருத்தவரை, கடந்த காலங்களில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. , கடந்த 6 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளிலும், இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை.

இந்த போட்டி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஆமிருக்கு எதிராக இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாட வேண்டும் என்றார்.

இது போர் அல்ல என்றும், இருதரப்பு ரசிகர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதேவேளை மான்செஸ்டர் நகரில், இன்று மழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாக
வானிலை மையம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க