விளையாட்டு செய்திகள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இதுவே வித்தியாசம்- விளக்கும் சச்சின்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை பொருத்தவரை போட்டியின் நெருக்கடியை கையாள்வதே இரு அணிகளுக்கு இடையிலான வித்தியாசம் என இந்திய கிரிக்கட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 17-வது லீக் போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு ஏதிரான பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தினை பார்த்தேன். ஆஸ்திரேலிய அணி 308 ஓட்டங்களை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.

தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 136 ஓட்டங்களுக்கு 2 விக்கட்கள் மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது.

ஆனால் போட்டியின் முக்கியமான பகுதியில் தங்களது விக்கட்களை பறிகொடுத்தனர். அவர்கள் இக்கட்டான நிலையில் இருக்கும்போது நெருக்கடியை கையாள முடியாமல் தோல்வியினை தழுவினர்.

ஆனால் இந்திய அணியினை பொருத்தவரை துடுப்பாட்டம், பீல்டிங், பந்துவீச்சு ஆகிய அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தொடக்க வீரர்கள் தங்கள் பங்கினை சிறப்பாக செய்து வருகின்றனர். விராட் கோலி அணியினை நிலைப்படுத்துவதற்கு முக்கிய வீரராக உள்ளார்.

டோனி மற்றும் பாண்டியா போன்ற வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையின்போது அணியினை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பினை சரிவர செய்து வருகின்றனர் என சச்சின் தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கட்டினை பொருத்தவரை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க