உள்நாட்டு செய்திகள்புதியவை

மக்களின் வேட்பாளரையே களமிறக்குவோம்’ – ஐ.தே.க அறிவிப்பு

மக்கள் விரும்பும் வேட்பாளரையே ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கும் என்று அக்கட்சியின் தவிசாளரான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

கேகாலை பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சியே தீர்மானிக்கும். பங்காளிக் கட்சிகளின் ஆதரவையும் பெறுவோம். மக்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றதோ அதை மதிக்கும் வகையிலேயே எமது செயற்பாடு அமையும்.

கேகாலை மாவட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். எனவே, மகாநாயக்க தேரர்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்று சாதகமான முடிவொன்றை எடுப்பேன்.” என்றும் கபீர் ஹாசீம் கூறினார்.

கருத்து தெரிவிக்க