உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஓவல் மைதானத்திற்கு முன்னால் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு உலகிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவளிக்கும் இலங்கையர்கள் சிலரால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது மனிதப் படுகொலைகள் இடம்பெற்றதாகவும். அதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகளை ஏந்தியவண்ணம் சுமார் 30 பேரளவில் ஓவல் மைதானத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க