சினிமா

சென்னை பொலிஸிடம் பாதுகாப்பு கோரி நடிகர் விஷால் மனு

நடிகர் சங்க தேர்தலை அமைதியான முறையில் நடத்த பாதுகாப்பு கோரி  சென்னை பொலிஸ் ஆணையாளர் விஸ்வநாதனிடம் பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தல் எதிர்வருகிற 23-ம் திகதியன்று, அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. நடிகர் சங்க தேர்தலில் சுமார் 2 ஆயிரம் பேர் வரை வாக்களிக்க உள்ளனர்.  இந்நிலையிலேயே பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

தேர்தல் சமயத்தில், எந்த வகையிலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலோ, பொதுமக்களுக்கு இடையூறோ ஏற்படாது என பொலிஸ் ஆணையாளர்
உறுதியளித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க