புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க பொருட்களுக்கான வரியை அதிகரிக்கிறது இந்தியா

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. நாளை முதல் இந்த வரி அமுலுக்கு வருகிறது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்களுக்கான வரியை  கடந்த வருடம் 25 வீதமாக அமெரிக்கா அதிகரித்த நிலையில் இந்தியாவின் உருக்கு வர்த்தகம் பாதிப்படைந்தது.

இந்நிலையிலேயே அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பாதாம், வால்நட் உட்பட 29 பொருட்களுக்கு இந்தியா வரியை அதிகரிக்கின்றது.

கருத்து தெரிவிக்க