வடக்கு செய்திகள்

யாழ். புங்கங்குளத்தில் திருட்டு சம்பவம்

யாழ்.புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் வாள் முனையில் மூதாட்டியை அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனா்.

இந்த சம்பவம் இன்ற அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடா்பாக அயலவா்கள் கூறுகையில், பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ள நிலையில் மூதாட்டி தனிமையில் இருந்துள்ளார்.

ஓய்வு பெற்ற அரச ஊழியரான குறித்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் வாளை காட்டி மூதாட்டியை அச்சுறுத்தியதுடன், மூதாட்டியின் வாய்க்குள் துணியை அடைந்து பணம், நகை மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனா்.

சம்பவம் தொடா்பாக பொலிஸாருக்கு தொியப்படுத்தியுள்ளதாகவும் தற்போது பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மக்கள் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் கொள்ளை சம்பவங்கல் இடம்பெற்றுள்ளதாக அயலவா்கள் கூறுகின்றனா்.

கருத்து தெரிவிக்க