உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாதம் தொடர்பில் அமெரிக்காவுடன் இலங்கை பேச்சு!

பயங்கரவாத முறியடிப்பு குறித்து அமெரிக்காவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, பயங்கரவாத முறியடிப்பு மற்றும் இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

சுதந்திரமான வெளிப்படையான இந்தோ-பசுபிக் பிராந்தியத்துக்கான, பகிரப்பட்ட கடப்பாடுகளின் அடிப்படையில் அமெரிக்க – இலங்கை ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க