உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

சட்டவிரோத மது விற்பனை -யாழில் மூவர் கைது

இலங்கையில் உள்ள சகல மதுபானசாலைகளையும் 2 நாட்கள் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

யாழ்ப்பாணம் முடமாவடி மதுபானசாலைக்கு முன்பாக வைத்து இன்று காலை 8 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

பொஷன் பௌர்ணமியினை முன்னிட்டு இன்றும் நாளையும் மதுபான சாலைகளை மூடுவதற்கான அறிவுறுத்தலை மதுவரித் திணைக்களம் நேற்று வழங்கியது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் முடமாவடி மதுபான சாலைக்கு சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் பாரவூதியில் வைத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த மூவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பாரவூர்தியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கால் போத்தல் அளவுடைய மதுபானப் போத்தல்கள் 450 போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.பாரவூர்திச் சாரதி மற்றும் இருவரே கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க