உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பயங்கரவாதம் இன்னமும் முடிவடையவில்லை: எஸ்.வியாழேந்திரன்

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதம் இன்னமும் முடிவடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் காலங்களில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் பல்வேறு நோக்கங்களுடன் செயற்பட்டாலும் தேர்தல் முடிந்ததன் பின்னர் தமது சமூகம் சார்ந்ததாகவே அவர்கள் செயற்படுகின்றனர்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதம் ஒரு சமூகத்தினை கருவோடு அழிக்கும் செயற்பாடு, இந்த பயங்கரவாதாம் இன்னும் முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் அப்பாவி மக்களை ஒருபோதும் குற்றம் சொல்வதில்லை. யாராகயிருந்தாலும் நீதியாகவும் நியாயமாகவும் செயற்பட வேண்டும் எனவும் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க