உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொது ஆடை சுற்றறிக்கை: தமது அனுமதியுடனேயே வெளியிடப்பட்டது- அமைச்சர்

அரச நிறுவனங்களில் பொது ஆடை தொடர்பான சுற்றறிக்கை தமது அனுமதியுடனேயே வெளியிடப்பட்டது என்று பொதுநிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சின் செயலாளர், உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் வெளியிட்ட தகவல் தொடர்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் அனுமதியுடனேயே குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக அமைச்சின் செயலாளர், தெரிவுக்குழுவின் முன்னிலையில் கூறியபோது தெரிவுக்குழுவின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க அமைச்சருக்கு இது தெரிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே அமைச்சர் மத்துமபண்டார இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க