உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கிளிநொச்சியில் கமக்கார அமைப்பினரால் மூதாட்டி தாக்கப்பட்டார்

கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் கமக்கார அமைப்பைச் சேர்ந்தவர்கள்
மூதாட்டி ஒருவரை தாக்கியுள்ளனர்

பாதிக்கப்பட்ட மூதாட்டி கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் சிறுபோகச்செய்கை மேறகொண்டுள்ள விவசாயிகளுக்கு உரிய முறையில் கமக்கார அமைப்பினால் நீர்விநியோகம் மேறகொள்ளப்படாமை குறித்து ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இரவு வேளை வீடொன்றுக்குச்சென்ற கமக்கார அமைப்பைச்சேர்ந்த சிலர் வீட்டிலிருந்து மூதாட்டியை தாக்கியுள்ளனர்.

கந்தசாமி மல்லிகாதேவி (வயது 65) என்பவரே கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கருத்து தெரிவிக்க