உள்நாட்டு செய்திகள்புதியவை

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஐந்து மீனவர்கள் கைது!

திருகோணமலை கடற் பகுதியில் சட்டவிரோத வலையினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை மற்றும் முள்ளிப்பொதான பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் இருந்து அவர்கள் பயன்படுத்திய சிறிய படகு ஒன்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க