உள்நாட்டு செய்திகள்புதியவை

சஹ்ரானுடன் நெருக்கமான உறவை பேணிவந்த ஒருவர் தமிழகத்தில் கைது!

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானுடன் நெருக்கமான உறவை பேணிவந்த ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்புத் தரப்பு செய்திகள் கூறுகின்றன.

சஹ்ரானுக்கும் குறித்த சந்தேக நபருக்கும் இடையில் ஃபேஸ்புக் ஊடாக தொடர்பு ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க