சினிமா

வடிவேலு மீது சமுத்திரக்கனி கண்டனம்

‘ஷங்கரை கிராபிக்ஸ் இயக்குனர் என்றும், சிம்புதேவனை சினிமா தெரியாதவர், என்றும் வடிவேலு பேட்டியொன்றில் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு சமுத்திரக்கனி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஷங்கரையும், சிம்புதேவனையும் நாகரிகமற்ற வார்த்தைகளால் பேசி இருப்பது பெரும் வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியது.

சிம்புதேவனின் திறமை, புலிகேசி படத்தை தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குனர்களை அவமதிக்காதீர்கள்’ என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் 2 ஆம் பாகத்தை தயாரிக்க ஷங்கரும், படக்குழுவினரும் திட்டமிட்டனர். அதைத்தொடர்ந்து, இதற்காக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பமானது.

இந்நிலையில் வடிவேலுவுக்கும், இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் முறைப்பாடு செய்தார்.

இந்த படத்தை முடித்து கொடுக்காமல் வடிவேலு வேறு புதிய படத்தில் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.

கருத்து தெரிவிக்க