விளையாட்டு செய்திகள்

இந்திய கிரிக்கட் அணி பயிற்சியாளர்களின் ஒப்பந்த காலம் நீட்டிப்பு

ரவிசாஸ்திரி உட்பட இந்திய அணிக்கான கிரிக்கட் உதவி பயிற்சியாளர்களின் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க இந்திய கிரிக்கட் வாரியத்தின் நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.

உலக கிண்ண கிரிக்கட் போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், மற்றும் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் நடத்தப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனினும் தற்போதைய பயிற்சி குழுவை மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்க இந்திய கிரிக்கட் வாரியத்தின் நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.

உலக கிண்ண தொடரில் இந்திய அணியினர் தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க