விளையாட்டு செய்திகள்

ஷிகர் தவான் காயம்- ரிஷாப் பான்ட் இங்கிலாந்து பயணம்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்து வரும் 4 விளையாட்டு போட்டிகளில் விளையாட முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கிண்ண போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பந்து தாக்கியதில் இடது கை பெருவிரலில் காயம் அடைந்தார்.

அவருக்கு பெருவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் அடுத்த 4 ஆட்டத்தில் விளையாட முடியாது எனினும் அவர் இன்னும் உலக கிண்ணப் போட்டி தொடரில் இருந்து விலகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் குணமடைய எடுக்கும் காலத்தை மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து அதற்கு தகுந்த முடிவு எடுக்கலாம் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளம் வீரர் ரிஷாப் பான்ட் இங்கிலாந்து செல்கிறார். ஆனால் அவர் மாற்று வீரராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க