உள்நாட்டு செய்திகள்புதியவை

அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றவதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு இது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பனை நிதியம் ஊடாக 50 பில்லியன் ரூபாவை வடக்கிற்காக செலவு செய்ய உள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் கூறினார்.

பனை நிதியம் தேர்தலை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு செயற்பாடு. மக்களது வாக்குகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க