இலங்கை

ஜனாதிபதியுடன் சுமந்திரன் பேச வேண்டிய அவசியமில்லை! தென்னிலங்கையில் எழுந்தது எதிர்ப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் பிரயோகிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுத்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த வேண்டிய தேவை கிடையாது. அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கை சுதந்திரக் கட்சியில் 12 உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே, புதிய அரசில் தமிழ் மக்களுக்கான தீர்வு எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் வழங்கப்படும். தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதியுடன் பேச்சை முன்னெடுக்க வேண்டிய தேவை கிடையாது என்றார்.

கருத்து தெரிவிக்க