உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னாரில்  இடம் பெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகை.

புனித ரமழான் (நோன்பு) பெருநாள் தொழுகைகள் இன்று புதன் கிழமை (5) நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இடம்பெற்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும்  அமைதியான முறையில் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.
மன்னார் மூர்வீதி ஜ-ம்மா பள்ளிவாசலில் மௌலவி அஸ்செய்க் எஸ்.ஏ.அசீம் தலைமையில் புனித ரமழான் பெருநாள் தொழுகையும், விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
இதன் போது மூர்வீதி மற்றும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்ஸீம்கள் புனித ரமழான் பெருநாள் தொழுகை மற்றும் விசேட பிரார்த்தனைகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தகக்து.

கருத்து தெரிவிக்க