உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நான் தயார்! – அசாத் சாலி

தாம் ஏதாவது தவறு இழைத்திருந்தால் அதனை சட்டத்தின் முன் நிரூபிக்குமாறு மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சவாலையும் தாம் எதிர்கொள்ள தயாராகவுள்ளதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, மேல் மாகாண முன்னாள் உறுப்பினர் ஸ்ரீ வர்ணசிங்க கூறுகையில், ஆளுநர் அசாத் சாலியின் நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க