உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

குருணாகலை வைத்தியசாலைக்கு முன்பாக பிக்குகள், பாதிரிமார், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில்!

பௌத்த பிக்குகள் உட்பட பெரும்பாலானோர் இன்று குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குருணாகலை வைத்தியசாலையின் வைத்தியரும் கருகலைப்பு சகத்திரசிகிச்சை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வைத்தியர் சாஃபியின் விசாரணைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுத்து விசாரணைகளை மேற்கொள்ளும் வைத்தியர் சரத் வீரபண்டாரவை பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பௌத்த பிக்குகள், கத்தோலிக்க பாதிரிமார் உட்பட பொதுமக்கள் என சுமார் இரண்டாயிரம் பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் அந்த பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க