உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவை மீறிய பௌத்த பிக்கு

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்றையதினம் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி வேலைகளை செய்வதற்காகவும் சென்ற செம்மலை கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரும், அடாத்தாக விஹாரை அமைத்துள்ள பிக்குவினாலும் இந்த இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.


குறித்த பிள்ளையார் ஆலயம் பலநூறாண்டுகளாக பழைய செம்மலை கிராமத்தில் அமைந்திருந்த நிலையில் போருக்குபின்னர் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் குடியமர்ந்து குருகந்த ரஜமகா விஹாரை எனும் பெயரில் விஹாரை ஒன்றையும் அமைத்துள்ளதுடன் பாரிய புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார் .

இந்த பிக்குவின் அத்துமீறலை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

இம்மாதம் 6ஆம் திகதி மாவட்ட நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்பட்டது..

அந்த தீர்ப்பில் இரண்டு தரப்பும் குறித்தபகுதியில் உள்ள ஆலயங்களில் தடையின்றி சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாடுக்கு செல்பவர்களுக்கு பௌத்த பிக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடாது.

இரண்டு தரப்பும் இந்த ஆலயங்களில் அபிவிருத்தி வேலைகளை செய்வதாக இருந்தால் உள்ளூர் தினைக்களங்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உரிய அனுமதிகளை பெற்று மேற்கொள்ளவேண்டும்.

ஏற்கனவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் என பெயர் சூட்டப்பட்டிருந்த பெயர் பலகையை நீக்கி பௌத்த பிக்கு கணதேவி தேவாலயம் என பெயர் பலகை நட்டியிருந்தார் அதனை மாற்றி மீண்டும் நீராவியடி பிள்ளயார் ஆலயம் என எழுதி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று உத்தரவுகளை நீதிமன்றம் காவல்துறையினருக்கு விடுத்திருந்தது.

இந்த உத்தரவை மீறினால் தண்டனைக்கு உட்படுத்தபடுவீர்கள் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது .

இந்த நிலையதில் இன்றையதினம் நீராவியடி பிள்ளயார் ஆலயத்தை சேர்ந்த நிர்வாகத்தினரும் அடியவர்களும் உரிய உள்ளூர் திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகார சபை ,கரைத்துறைபற்று பிரதேச சபை ஆகியவற்றினதும் அனுமதிகளுடன் நீதிமன்றின் தீர்ப்புக்கு உட்பட்டு பிள்ளையார் ஆலயத்தின் இருமருங்கிலும் “நீராவியடி பிள்ளயார் ஆலயம்” எனும் பெயர் பலகையை நாட்ட சென்றவேளை பௌத்த பிக்குவுக்குவாலும் விகாரைக்கு பாதுகாப்புக்காக இருந்த காவல்துறை அலுவலராலும் தடுக்கப்பட்டனர்


மேலும் உடனடியாக பௌத்த பிக்குவால் காவல்துறையினருக்கும், விசேட அதிரடி படையினருக்கும் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வருகைதந்த காவல்துறையினர்; பௌத்த பிக்குவுக்கு சார்பாக செயற்பட்டு ஆலயத்தில் வழிபாட்டுக்காகவும் நீதிமன்றின் உத்தரவை மத்தித்து பெயர்பலகை நாட்ட வந்த செம்மலை கிராம மக்களை நிலத்தில் அமர்த்தி அனைவரினதும் பெயர் அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றையும் பதிந்ததோடு மிக நீண்டநேரம் விசாரணைகளிலும் ஈடுபட்டனர்.

மேலும் செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளரை புகைப்படம் எடுக்கவேண்டாம் எனவும் ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திய பின்பும் அவரின்; அடையாள அட்டையை வாங்கி பதிவுகளை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் நீதிமன்றின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவேண்டிய காவலதுறையினர்; அதனை மதிக்காது நடைமுறைப்படுத்தாது உதாசீனம் செய்துவருவதாக பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு சென்ற செம்மலை கிராம மக்கள் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தனர்

கருத்து தெரிவிக்க