உலகம்

சுவிற்சலாந்தில் ரயில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை !

சுவிற்சலாந்தில் உள்ள வோறென்லொஸ் ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பச்சிளம் குழந்தை ஒன்று , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

22 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரயிலை எதிர்பார்த்து எட்டிப் பார்த்த தந்தையின் கையிலிருந்த குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்துள்ளது. குழந்தையின் அலறலும், ரயிலுக்காக காத்திருந்த பயணிகளின் அலறல் சத்தமும் ஒன்றாக ஒலித்ததை அடுத்து, ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரயிலின் சாரதி அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தும் பலனின்றி போனதால் குழந்தை ரயிலில் சிக்கியுள்ளது‌. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது‌

இந்த விடயம் தொடர்பில் அரச தரப்பினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க