இன்று (மார்ச் 18) டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் நாவற்காடு பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 27,000 வெளிநாட்டு சிகரட்டுக்கள் அடங்கிய 135 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 19ம் திகதி நீர்க்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க