நேற்று (ஜனவரி 28) கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடமுல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 02 கிலோ 218 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற 6 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பணமும் 03 கையடக்கத்தொலைப்பேசி மற்றும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க