நேற்று (ஜனவரி 27) ஹட்டனிலிருந்து வட்டவளை மவுண்ட்ஜீன் தோட்டத்திற்கு பயணித்த முச்சக்கரவண்டி சாரதியின் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை குயில்வத்தை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகில் வீதியை விட்டு விலகி 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியும் பயணி ஒருவரும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனரென தகவல் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க