இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் செயலாளர் பதவிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் காரணமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் 6 அரசியல் கட்சிகளுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியாதெனவும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளதெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளது.

அதற்கிணங்க நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய லங்கா பொதுஜன கட்சி, ஐக்கிய லங்கா மகா சபை, இலங்கை மக்கள் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகள் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க