Uncategorized

உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரியின் மனைவி முதல் குழந்தையை பெற்றெடுத்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய தற்கொலைதாரியின் மனைவி தமது முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குறித்த தினத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய 9 பேரில் 22 வயதான சட்டத்துறை பட்டதாரியான அலாவுதீன் அஹமட் முவாத்தும் அடங்கியிருந்தார்.

அவர் 14 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டதாகவும் இந்தநிலையில் அவரின் மனைவி கடந்த மே மாதம் 5ஆம் திகதி முதல் குழந்தையை பெற்றெடுத்ததாகவும் அவரின் தந்தையான அஹமட் லெப்பெ அலாவுதீன் கோட்டை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த தற்கொலைதாரியின் குடும்பத்தினரும் தமது சாட்சியங்களை வழங்கினர்.

இதேவேளை முவாத்தின் சகோதரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க