இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தரம் 05 புலமைப்பரிசில் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

2024ற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தற்போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பரீட்சை அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க செப்டம்பர் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 தொடக்கம் 10.45 வரை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இரண்டாவது வினாத்தாள் நடைபெறவிருப்பதோடு முதலாவது வினாத்தாள் காலை 11.15 தொடக்கம் 12.15 வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக 2649 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தினூடாக ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியுமெனவும் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகவல்கள் திருத்தப்பட வேண்டுமானால் இன்று (செப்டம்பர் 02) முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை நிகழ்நிலை மூலம் திருத்தம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க